Published : 28 Oct 2022 06:14 AM
Last Updated : 28 Oct 2022 06:14 AM

சீனாவில் கரோனாவுக்கு வாய் வழியே மருந்து

பெய்ஜிங்: கரோனாவை தடுக்க வாய் வழியே உட்கொள்ளும் தடுப்பு மருந்து உலகில் முதல் முறையாக சீனாவில் பயன்பாட்டுக்கு வந்தது. சீனாவில் தற்போது மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. 90 சதவீதம் பேர் அந்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் 57 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டதாகவும் அரசு கூறுகிறது. இந்நிலையில், கரோனாவைத் தடுக்க வாய் வழியே உட்கொள்ளும் தடுப்பு மருந்து சீனாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஷாங்காய் நகரில் மக்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x