Published : 27 Oct 2022 06:08 AM
Last Updated : 27 Oct 2022 06:08 AM

10, பிளஸ் 2 துணைத்தேர்வு: அக்.31-ல் சான்றிதழ்

சென்னை: 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அக்டோபர் 31-ம் தேதி வழங்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராமவர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 31-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்.31-ம் தேதி முதல் அவரவர் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x