Published : 22 Sep 2022 06:03 AM
Last Updated : 22 Sep 2022 06:03 AM

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.8 வரை விடுமுறை நீட்டிப்பு

சென்னை

அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு அக்டோபர் 1-5 வரை விடுமுறை என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பிற்கு அக்டோபர் 1-8 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

6-8 வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 1-5 வரை விடுமுறை எனவும், 6-ம் தேதியில் இருந்து அவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் எனவும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x