Published : 19 Sep 2022 06:25 AM
Last Updated : 19 Sep 2022 06:25 AM
புதுடெல்லி: டெல்லியில் குடிசைப்பகுதி மாணவர் களுக்கான விளையாட்டுப் போட்டி களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கிவைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மாணவர்களின் விளையாட்டுத் திறனையும் தன்னம் பிக்கையையும் ஊக்குவிக்கும் வகையில் குடிசைப் பகுதி மாண வர்களுக்கான விளையாட்டுப் போட்டி கள் நேற்று நடைபெற்றன. டெல்லி தயான்சந்த் விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பிரதமரின் குறிக்கோள்: அப்போது பேசிய அமித் ஷா,‘குடிசைப் பகுதியில் உள்ள மாண வர்களும் படிப்புடன் விளையாட்டுத் திறன்களையும் பெறவேண்டும். சமூகத்தின் எல்லா தரப் பினரும் சமமாக வளர்ச்சி அடையவும் தேசிய நீரோட்டத்தில் இணையவும் வேண்டும் என்ற பிரதமர் மோடியின் குறிக்கோளை அடையும் விதமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகள் படிப்புடன் மாணவர்களை விளை யாட்டுகளுடனும் இணைக்கும். அவர்களிடயே தன்னம்பிக்கையை வளர்க்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT