Published : 07 Sep 2022 06:08 AM
Last Updated : 07 Sep 2022 06:08 AM
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சாற்றலை வளர்க்க புதன்கிழமை தோறும் ஆங்கில சிறப்பு பயிற்சி கூட்டத்தை நடத்த கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களால் ஆங்கிலம் பேச முடிவதில்லை என்கிற குறை நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்த குறையை போக்க ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 30,782 மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆங்கில மொழி பேசுவதில் ஒவ்வொரு மாணவருக்கும் இருக்கக்கூடிய சிக்கலை கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் பணியாளர் பற்றாகுறையை போக்க தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி நிர்வாகக் குழுக்களுக்கு மாநகராட்சி கவுன்சில் சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த ஆசிரியர்கள் மூலமும் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT