Published : 12 Aug 2022 06:04 AM
Last Updated : 12 Aug 2022 06:04 AM

மத்திய காவல் படை உதவி ஆய்வாளர் தேர்வு எஸ்எஸ்சி அறிவிப்பு

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் நேரடி தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டிருக்கிறது.

பதவி, வயது வரம்பு, குறைந்தபட்ச கல்வித்தகுதி, காலியிடங்கள், தேர்வுக்கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எஸ்எஸ்சி இணையதளத்தில் (www.ssc.nic.in) விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தகுதியுடைய நபர்கள் ஆகஸ்டு மாதம் 30- தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணத்தை 31-ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை ஆன்லைனில் செலுத்தலாம்.

கணினிவழி தேர்வு நவம்பரில் தமிழ்நாட்டில் 7 மையங்கள் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என சென்னையில் உள்ள எஸ்எஸ்சி தென்மண்டல இயக்குநர் கே.நாகராஜா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x