Published : 10 Aug 2022 06:32 AM
Last Updated : 10 Aug 2022 06:32 AM

உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ஆயுத உதவி

வாஷிங்டன்: உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தற்காப்பு நடவடிக்கையாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்துகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்க நிதி மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத உதவிகள் வழங்கப்படும் என்றும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x