Published : 10 Aug 2022 06:36 AM
Last Updated : 10 Aug 2022 06:36 AM

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அர்ஷ்தீப் சிங்குக்கு சாஸ்திரி ஆதரவு

புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் இடம்பெற வேண்டும் என அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை அணியில் பங்கேற்கும் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பந்து வீச்சாளர்களின் பங்கு என்பது இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும். அதோடு அந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட நிச்சயம் பவுலர்களே கை கொடுப்பார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் அந்த மைதானங்களில் விளையாடுவதற்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அது மேலும் சாதகமாக இருக்கும்.

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x