Published : 10 Aug 2022 06:38 AM
Last Updated : 10 Aug 2022 06:38 AM

ஜிம்பாப்வேவுடன் ஒரு நாள் தொடர்: இந்திய அணிக்கு தவண் கேப்டன்

புதுடெல்லி: ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஷிகர் தவண் கேப்டனாக செயல்படவுள்ளார்.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. வரும் 18-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது. 2-வது போட்டி 20-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22-ம் தேதியும் நடக்கிறது. 3 போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடருக்கு ஷிகர் தவண் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல் ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார்.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறவிருந்த இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே, ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. அணியை கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்துவார். காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இடம்பெறவில்லை.

ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், யுவேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x