Published : 04 Aug 2022 06:04 AM
Last Updated : 04 Aug 2022 06:04 AM

டிஎன்பிஎஸ்சி நடத்திய செயல் அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் (கிரேடு-1) பதவியில் காலியாகவுள்ள 26 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஏப்ரல் 23 மற்றும் 24-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 989 பேர் எழுதினர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகஸ்டு 18-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x