Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM
பத்தாம் வகுப்பு முடித்த மாண வர்களுக்கு அடுத்த வாரம் மதிப்பெண் சான்றிதழ்கள் விநி யோகம் செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக 2020-21-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களைத் தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது.
அதேசமயம், உயர் கல்வி சேர்க்கைக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத் தப்பட்டது.
இந்நிலையில். 10-ம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுதல் பணிகள் சமீபத்தில் நிறைவுபெற்றன. இதையடுத்து, மாணவர்களுக்கு அடுத்த வாரம் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது,"10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுவிட்டன.
அச்சிடல் பணிகளில் மெத்தனம்
அங்கிருந்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வழியாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் நாளை (அக். 1) சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்த பின்னர், மாணவர்களுக்கு அடுத்த வாரம் சான்றிதழ்களை வழங்க முடிவு செய்துள்ளோம்.
நடப்பாண்டு அச்சிடல் பணிகளில் ஏற்பட்ட மெத்தனத்தால், சான்றிதழ் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT