Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
இணையவழி வகுப்புகளால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், மாணவர்கள் எதிர்காலம் கருதி பள்ளியை பாதுகாப்பான முறையில் உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் தனியார் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் பாண்டிஸ்வரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் நேற்று மனு அளித்தார்.
மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு முதல் பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் இணைய வழியாகவே, பாடங்கள் நடத்தப்படுகின்றன. பல மாதங்களாக வகுப்புகளை அலைபேசியில் பல மணி நேரம் கவனிப்பதால், மாணவர்களின் கண்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதேபோல, தொடர்ந்து இணைய வழி வகுப்புகளால், மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பள்ளிகளை உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT