Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM
இந்திய ராணுவத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆள்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் வரும் ஏப்.15 முதல்25-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆள்சேர்ப்பு முகாம் வரும் பிப்.10 முதல் 26-ம்தேதி வரை நடைபெற உள்ளது.ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கமுடியும்.
கூடுதல் தகவல்களுக்கு 044-25674924/ 25 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT