Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அமைச்சர் இன்று அறிவிக்கிறார்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புக்கான பொது தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அறிவிக்கிறார்.

கரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்க பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை சிபிஎஸ்இ குறைத்தது. இதற்கிடையே, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும் அதற்காக தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ கடந்த மாதம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களும், ஆசிரியர்களும் ட்விட்டர்மூலம் கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர்களின் கருத்துகள் குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிலையில், பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை இன்று (டிச.31) மாலை 6 மணிக்கு நடைபெறும் வெபினார் (இணையவழி நிகழ்ச்சி) நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிக்கவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த வெபினார் நேரலை நிகழ்ச்சி அமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படவுள்ளது.

பொதுத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், அட்டவணை உள்ளிட்ட அனைத்தும் https://cbse.nic.in/ என்ற சிபிஎஸ்இ-யின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x