Published : 10 Mar 2020 06:52 PM
Last Updated : 10 Mar 2020 06:52 PM

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாநிலம் முழுவதும் கடந்த 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை சுமார் 8.35 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். அதேபோல 11-ம் வகுப்புத் தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படுகின்றன. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி முடிகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 2019-20-ம் கல்வி ஆண்டில் ஏப்ரல் 20-ம் தேதி வரை செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன. இதையடுத்து, வரும் 21-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும் அடுத்த மாதம் தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதனால் ஏப்.20-ம் தேதிக்கு மறுநாள், ஏப்ரல் 21-ல் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x