Published : 26 Feb 2020 10:50 AM
Last Updated : 26 Feb 2020 10:50 AM

உலகிலேயேஅதிக வயதுடைய ஆண் மரணம்

டோக்கியோ

வடக்கு ஜப்பானில் உள்ள நிகாடாவில் 1907-ம் ஆண்டில் பிறந்தவர் சிதெட்சு வதனபே. இவர் உலகிலேயே அதிக வயதுடையவர் என்றுபிப். 12-ல் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

உங்களின் நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் என்று சிதெட்சுவிடம் கேட்டால், “எதற்கும் கோபப்படாதீர்கள், சிரித்துக்கொண்டே இருங்கள்” என்று அறிவுரை வழங்கினார். இவர், மிட்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 பிள்ளைகளும், 12 பேரக் குழந்தைகளும்,16 கொள்ளு பேரப்பேத்திகளும் உள்ளனர்.

இந்நிலையில், 112 ஆண்டு 356 நாட்கள் வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x