Published : 14 Feb 2020 08:21 AM
Last Updated : 14 Feb 2020 08:21 AM
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியை இலவசமாக மேற்கொள்ள இரண்டு புதிய உதவித்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார்.
குவஹாத்தியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சர்மா கலந்து கொண்டு பேசினார். அப்போது நிதியாண்டு 2019-20 -க்கான மாநில பட்ஜெட்டில் கியான் தீபிகா உதவித்தொகைத் திட்டத்தை தொடங்கி இருப்பதாக அவர் அறிவித்தார்.
மேலும், “இந்த திட்டத்தின்கீழ் 13,414 அரசு கல்லூரி மாணவர்களுக்கு பத்து மாதங்களுக்கு நேரடி மானியமாக மாதந்தோறும் ரூ.700 அனுப்பப்படும்.
ஹெச்.பி.சி. உதவித்தொகை திட்டத்தின்கீழ் இந்துஸ்தான் பேப்பர் நிறுவனத்தின் ஊழியர்களின் குழந்தைகள் 1 லட்சம் பேருக்கு உதவித்தொகை அளிக்கப்படும்” என்று அமைச்சர் சர்மா தெரிவித்தார்.
கோவாவில் சுற்றுலா கண்காட்சி இன்று தொடக்கம்
பனாஜி
ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சுற்றுலா கண்காட்சி இந்த முறை இன்று வெள்ளிக்கிழமை கோவாவில் தொடங்குகிறது.
இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளர் ஒருவர் கூறியதாவது:
இரண்டு நாட்கள் நடத்தப்படும் இந்த கண்காட்சி, சுற்றுலா பயணிகள் சிக்கல் இல்லாமலும் பல சுவாரசியமான இடங்களுக்கு பயணம் செய்வதற்கான துல்லியமான தகவல்களையும் வழங்க உதவி செய்யும். மேலும் சுற்றுலா பயணிகள் அதிக இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இது நடத்தப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு பல்வேறு இடங்களை பற்றிய தகவலும், அதில் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு, அவர்களை கவரும் விதத்தில் சலுகைகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT