Published : 10 Jan 2020 09:57 AM
Last Updated : 10 Jan 2020 09:57 AM
சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள்துறை சார்பில், இளம் சிறார்கள் கவனிப்புத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 3 மாதங்களாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.
முதல் கட்ட பரிசோதனையில் 158 மாணவ, மாணவிகளுக்கு இருதய பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களுக்கு, சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் நிர்மல்சன் தலைமையில் புதன்கிழமை இருதய பாதிப்பை கண்டறியும் ‘எக்கோ’ பரிசோதனை மேற்
கொள்ளப்பட்டது.
இருதய அறுவை சிகிச்சை அதில், மாணவ, மாணவிகள் 114 பேருக்கு இருதய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 64 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கும், மற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு மருந்துகள் மூலமான சிகிச்சை அளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
“இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ செலவின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது” என்று சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT