Published : 25 Nov 2019 04:16 PM
Last Updated : 25 Nov 2019 04:16 PM
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் 2 தலைகள், 3 கைகளுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து விதிஷா மாவட்ட மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்சய் கரே கூறும்போது, ''இங்கிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள சுஜா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் அகிர்வார்.
கூலித்தொழிலாளியான அவருக்கு, கடந்த ஆண்டு பபிதா அகிர்வார் என்னும் 23 வயதுப் பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர்கள் இருவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்தது.
2 தலைகளோடு ஒட்டிப் பிறந்த அக்குழந்தை 3.3 கிலோ எடையுடன் இருந்தது. அதேபோல மூன்று கைகளும் நான்கு பாதங்களும் இருந்தன. குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே உடல்நிலை சரியில்லாததால் ஐசியூவில் வைக்கப்பட்டது.
எனினும் குழந்தையின் உடல்நிலை மோசமானதால், போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT