Published : 19 Nov 2019 09:53 AM
Last Updated : 19 Nov 2019 09:53 AM
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடியில் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 141 மாணவர்கள் பயில்கின்றனர்.
இங்கு இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. இதன் மூலம் மரக்கன்று வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், மரம் வளர்ப்பில் மாணவர்கள் காட்டும் ஆர்வத்தை கண்ட ஆசிரியர்கள், அவர்களை ஊக்குவித்து, பாடவேளை முடிந்தபின் விதைப் பந்துகள் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தினர். இதன்மூலம்மாணவர்கள் 10 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்தனர்.
அவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமிகலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினார். மேலும், அகமதாபாத்தில் நடைபெற்ற டிசைனிங் (Design for Change) போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜகுமாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து இயற்கைபாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்மன்ற ஒருங்கிணைப்பாளர் அறிவியல்ஆசிரியர் சுந்தரமூர்த்தி கூறும்போது,"பள்ளி வளாகத்தில், தேக்கு, புங்கன், மலைவேம்பு, நெல்லி, கொய்யா என 25 வகையான மரக்கன்றுகள் நட்டுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT