Published : 14 Nov 2019 08:05 AM
Last Updated : 14 Nov 2019 08:05 AM
கோவாவில் இயற்கை விவசாயத்திற்காக தனி பல்கலைக்கழகம் விரைவில் அமைய உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவாதுணை முதல்வரும், மாநில வேளாண்துறை அமைச்சருமான சந்திரகாந்த் கவ்லேகர் கலந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இயற்கை விவசாயம் பற்றி படிப்புகளை கொண்ட, ‘இயற்கை விவசாயபல்கலைக்கழகம்’ என்ற விவசாயத்திற்காக தனி பல்கலைக்கழகம் அமையவுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கமானது, வேளாண் துறை சம்பந்தமான ஆராய்ச்சிகள், ஆய்வில் கவனம் செலுத்தவும், கோவா மண்ணுக்கு ஏற்ற பல்வேறு பயிர்களை பற்றி ஆராய்ச்சி செய்யவும் பிரத்தேகமாக அமைய உள்ளது.
பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக, சமீபத்தில் புனேவில் உள்ள விவசாய கல்லூரி, மகாத்மா பூலே கிருஷி வித்யா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT