Published : 13 Nov 2019 08:25 AM
Last Updated : 13 Nov 2019 08:25 AM

அனைத்து பஞ்சாயத்துகளிலும் மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

‘‘கருவுறும் சதவீதத்தை குறைக்க பிஹாரின் அனைத்து பஞ்சாயத்துகளிலும் மேல்நிலைப் பள்ளிகளைத் தொடங்கப்படும்’’ என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்துள்ளோம். பிஹாரில்உள்ள கருவுறுதல் சதவீதத்தைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிஹார் மாணவி இன்டர்மீடியேட்டில் தேர்ச்சி பெறும்போது கருவுறுதல் வீதம் 1.6 ஆகக் குறையும். இதை மனதில் கொண்டு இதுவரை 6 ஆயிரம் பஞ்சாயத்துகளில் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் மீதமுள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் மேல்நிலைப் பள்ளிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 2005-ல் நான் பொறுப்பேற்ற பிறகு 4.3 ஆக இருந்த மாநிலக் கருவுறுதல் வீதம், 3.3 ஆகக் குறைந்தது. அதேபோல 12.5 சதவீதமாக இருந்த பள்ளி செல்லா குழந்தைகளின் வீதம் 1% குறைந்துள்ளது. இதற்கு கல்வித் துறையில் அரசு செய்த சீர்திருத்தங்களே முக்கியக் காரணம் என்றார்.

பிஹார் முழுவதும் 8,500 பஞ்சாயத்துகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கப்படுவதன் மூலம் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை குறையும். சிறுவயதிலேயே பெண்கள் திருமணம் செய்வதுதடுக்கப்பட்டு, கருவுறுதல் வீதம் குறையும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x