Published : 25 Oct 2019 04:42 PM
Last Updated : 25 Oct 2019 04:42 PM
கொல்கத்தா
5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைமுறை மேற்கு வங்கத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கட்டாயத் தேர்ச்சி முறையை நீக்க முடிவுசெய்துள்ள மேற்கு வங்க அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடைமுறையை மீண்டும் கொண்டு வர உள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, ''அடுத்த கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மீண்டும் தேர்ச்சி - தோல்வி முறை கொண்டு வரப்படும்.
6 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்குச் செல்ல அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க அரசு, 2010-ம் ஆண்டு கட்டாயத் தேர்ச்சி முறையைக் கொண்டு வந்தது. அப்போது, இந்த முறை மோசமான தரம் கொண்ட மாணவர்களை உருவாக்கிவிடும் என்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT