Published : 18 Oct 2019 09:15 AM
Last Updated : 18 Oct 2019 09:15 AM
சென்னை
பள்ளிக்கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குநர் சுடலை கண்ணன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ள கணித, அறிவியல், ஆங்கில உபகரணப் பெட்டிகள், புத்தகங்கள், அகராதிகள், மடிக்கணினி, பயிற்சி கையேடுகள், விளையாட்டு பொருட்கள் உட்பட பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்த உபகரணங்கள் பயன்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் கற்பித்தால்தான் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும். எனவே, ஆசிரியர்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT