Published : 17 Oct 2019 10:34 AM
Last Updated : 17 Oct 2019 10:34 AM
கொல்கட்டா
கொல்கட்டாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இந்தியா 1-1 என்ற கோல்கணக்கில் டிரா செய்தது. இந்நிலையில் வலிமை குறைந்த வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெறாமல் டிராசெய்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கால்பந்து அணியின்கேப்டன் சுனில் சேட்ரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுனில் சேட்ரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியின்போது ரசிகர்கள் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தனர். ஆனால் அவர்கள் அளித்த உற்சாகத்துக்கு ஏற்ற வகையில் நாங்கள் ஆடவில்லை.
எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இது எங்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்காக நாங்கள் வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறாததால், உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT