Published : 16 Oct 2019 10:22 AM
Last Updated : 16 Oct 2019 10:22 AM

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் அவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் நோக்கிலும் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மின்னணு மற்றும் கருவிமயமாக்கல் பொறியியல் துறை சார்பில் "டெக்னோ பிளிஸ்" என்ற 2 நாள் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி தாம்பரத்தை அடுத்த பொத்தேரியில் பல்கலைக்கழகத்தின் டெக் பார்க் அரங்கில் நடைபெற்றது.

இந்த அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியில், கல்பாக்கம் இந்திராகாந்தி அனு ஆராய்ச்சி மையத்தின்அனு ஆராய்ச்சி சம்மந்தமன சாதனங்கள் உள்பட 14 விதமான ஆய்வக சாதனங்கள் இடம்பெற்றன.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்காட்சியைப் பார்வையிட்டனர், அவர்களுக்கு கண்காட்சி அமைப்பாளர்கள் தொழில்நுட்ப சாதனங்களின் செயல்பாடுகளை விளக் கிக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x