Published : 15 Oct 2019 07:55 AM
Last Updated : 15 Oct 2019 07:55 AM
புதுக்கோட்டை
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் தற்காப்பு கலைப்பயிற்சிகள் (கராத்தே) அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே லட்சுமி நரசிம்மபுரம் (அணவயல்) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ) தற்காப்பு கலைப் பயிற்சியை (கராத்தே) பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
மாணவிகளுக்கு கராத்தே மாஸ்டர் அடைக்கலராஜா தற்காப்பு கலைப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர் வீரசேகர் ஒருங்கிணைத்தார். மாணவிகளுக்கு தொடர்ந்து இப்பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம் பிக்கை அளிக்கும் என்று தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT