Published : 14 Oct 2019 07:29 AM
Last Updated : 14 Oct 2019 07:29 AM

எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 2019

சுவீடன்

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு அளப்பரிய பங்காற்றியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது.

2019 ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு கடந்த வெள்ளிக்கிழமை (11 அக்டோபர்) அன்று அறிவிக்கப்பட்டது.

2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலி பெறவிருக்கிறார். அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார். இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x