Published : 09 Oct 2019 10:56 AM
Last Updated : 09 Oct 2019 10:56 AM
சென்னை
காலாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்குமாறு ஆசிரியர் களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு காலாண் டுத்தேர்வுகள், செப்., 23-ம் தேதி முடிவடைந்து 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மீண்டும், 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஆயுத பூஜை விடுமுறை விடப்பட்டிருந்தது.
சிறப்புப் பயிற்சி
இந்நிலையில், பள்ளிகள் மீண்டும் இன்று (புதன்கிழமை) திறக்கின்றன ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பின்தங்கிய மாணவர்களுக்கு, எந்த பாடத்தில் மதிப்பெண் குறைந்ததோ, அந்த பாடத்தில், காலை, மாலை நேர சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி, மாணவர்களின் தேர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறி வுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT