Published : 09 Oct 2019 08:56 AM
Last Updated : 09 Oct 2019 08:56 AM
ஹின்டன்
இந்திய விமானப் படையின் 87-வது ஆண்டு விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்.
இந்திய விமானப் படையின் கவுரவ குழு தலைவராக சச்சின் டெண்டுல்கர், கடந்த 2010-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஹின்டன் விமானப் படை தளத்தில் நேற்று நடந்த விமானப்படையின் 87-வது ஆண்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் விமானப் படையின் சீருடையை அணிந்து சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். அப்போது சச்சினின் மனைவி அஞ்சலியும் உடன் இருந்தார். முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமானப் படைக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT