Published : 21 Jun 2023 04:06 AM
Last Updated : 21 Jun 2023 04:06 AM

உடுமலை மாணவிகளுக்கு காமராஜர் விருது

உடுமலை அரசு பள்ளி மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி காமராஜர் விருது வழங்கி பாராட்டினார்.

உடுமலை

தமிழக அரசின் கல்வித் துறை சார்பில், தமிழ் வழி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் காமராஜர் விருதும்,ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கல்வியுடன் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு விருதும் ரூ.10,000 ரொக்கமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு விருதுடன் ரூ. 20,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

2022-2023-ம் கல்வி ஆண்டில் உடுமலை அரசுப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்ற மாணவி கோ.சி.யாழினி,பிளஸ் 2 மாணவி எஸ்.சஹானா பர்வீன்ஆகியோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி இவ்விருதுகளை வழங்கி கவுரவித்தார். அவர்கள்படிப்புடன் கராத்தே, ஓவியம், உள்ளிட்ட தனித்திறன்களிலும் சிறந்துவிளங்கியதால் தேர்வாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x