Published : 20 Jun 2023 05:04 AM
Last Updated : 20 Jun 2023 05:04 AM

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

புதுடெல்லி

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இந்தியா வந்துள்ள வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார். இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வியட்நாமின் பாதுகாப்பு அமைச்சர் பன் வான் ஜியாங், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு, சர்வதேச பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது:

கடந்த ஆண்டு நான் ஜூன் மாதம் வியட்நாமுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றபோது, இந்தியா மற்றும் வியட்நாம் பாதுகாப்பு கூட்டாண்மை குறித்த பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும். இது எதிர்காலத்திற்கு பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x