Published : 20 Jun 2023 05:24 AM
Last Updated : 20 Jun 2023 05:24 AM
ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான சேபர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சி.ஏ.பவானி தேவி, உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் பவானி தேவி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 15-10 என்ற கணக்கில் மிசாகி எமுராவை தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் அரை இறுதிசுற்றுக்கு முன்னேறினார் பவானி தேவி.அரை இறுதி சுற்றில் கால்பதித்ததன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அரை இறுதி சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவுடன் மோதினார் பவானி தேவி.
இதில் கடுமையாக போராடிய பவானி தேவி 14-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அரை இறுதியில் தோல்வி அடைந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் பவானி தேவி.
29 வயதான பவானி தேவிக்கு இந்தத் தொடரில் முதல் சுற்றில்‘பை’ வழங்கப்பட்டிருந்தது. 2-வதுசுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவைவ தோற்கடித்த பவானி தேவி, கால் இறுதிக்குமுந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒசாகி செரியை வீழ்த்தியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT