Published : 19 Dec 2022 06:10 AM
Last Updated : 19 Dec 2022 06:10 AM

ப்ரீமியம்
நம்ம ஸ்கூல் திட்டம் சிறக்க வழி

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த, ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர்ந்த பதவி வகிக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளைத் தத்தெடுத்தெடுக்க ஏதுவாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது.

இதன் மூலம் அரசு பள்ளிகளின் முன்னாள் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர் பராமரிப்பு, சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், சுகாதாரமான கழிப்பிடங்கள், இணையதள வசதிகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட தங்களாலான நிதி நல்க முடியும் என்கிற புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசு பள்ளிகள் அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, அவை மக்கள் பள்ளிகள் என்பதால் ஊர் கூடி தேர் இழுப்பது போன்று அரசு பள்ளிகளை அனைவரும் அரவணைத்தல் சாலச் சிறந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x