Published : 18 Nov 2022 06:02 AM
Last Updated : 18 Nov 2022 06:02 AM

பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை முழு வேலை நாள்

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதியாக அக். 25-ம் தேதி ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்தது.

அந்த கூடுதல் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x