Published : 26 Oct 2022 06:10 AM
Last Updated : 26 Oct 2022 06:10 AM
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி வரலாறு படைத்துள்ளது.
இந்த ராக்கெட் வழியாக ஏவப்பட்ட ஒவ்வொரு செயற்கைக் கோளும் சுமார் 150 கிலோ எடை கொண்டவையாக விளங்கின. அவ்வாறாக 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5,400 கிலோ எனச் சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இந்த ராக்கெட்டில் 8000 கிலோ எடை வரை செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்ல முடியுமாம். ராக்கெட் ஏவுதளம் மற்றும் ராக்கெட்டுகள் இல்லாத நாடுகள் தங்களது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்தியா இதன் மூலம் வர்த்தகரீதியாக உதவ முன் வந்துள்ளது. இந்த ராக்கெட்டில் உள்ள மேலுமொரு சிறப்பம்சத்தை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT