Published : 01 Jan 2022 07:03 AM
Last Updated : 01 Jan 2022 07:03 AM

ஜன.29 முதல் பிப்.6 வரை நடக்கிறது; முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: கால அட்டவணை 15 நாளுக்கு முன் வெளியாகும்

சென்னை

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இணையவழி தேர்வு,ஜன.29 முதல் பிப்.6 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர்தேர்வு வாரியத் தலைவர் ஜி.லதாநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள், கடந்த செப்.18 முதல் நவ.14 வரை பெறப் பட்டன. அந்த நேரத்தில் கணினிவழி தேர்வு தேதி அறிவிக்கப் படவில்லை.

தற்போது, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கணினிவழி தேர்வை ஜன.29 முதல் பிப்.6-ம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது. விரிவான தேர்வு காலஅட்டவணை தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பாக வெளியிடப் படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x