Published : 02 Sep 2020 07:47 PM
Last Updated : 02 Sep 2020 07:47 PM

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்ளிட்ட படிப்புகளுடன் எம்சிஏ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக புதிய கல்வியாண்டு சேர்க்கை தாமதமானது.

இதற்கிடையே பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ ஆகிய படிப்புகளுக்கு வெளிமாநில மாணவர்கள் செப்டம்பர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. எனினும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் போதாது எனவும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் செப்.30-ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைப் பல்கலைக்கழகப் பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வெளிமாநில மாணவர்கள் https://www.annauniv.edu/otherstate2020/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதில் அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு 044-2235 8314 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x