Published : 26 Nov 2019 08:52 AM
Last Updated : 26 Nov 2019 08:52 AM

ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் சம்ஸ்கிருதம் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்

மேற்கு வங்கத்தில் உள்ள பணாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத துறை உதவி பேராசிரியராக ரம்ஸான் அலி என்பவர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இதற்கு, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பெளூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திர் கல்லூரியில் சம்ஸ்கிருத பேராசிரியராக ரம்ஸான் நியமிக்கப் பட்டார். இதுகுறித்து ரம்ஸான் கூறும்போது, ‘‘கல்லூரி முதல்வர் சுவாமி சாஸ்திரஜ் நந்தாஜி மகராஜ் மற்றும் எல்லோரும் என்னை வரவேற்றனர். அப்போது மகராஜ், உன் மத அடையாளம் இங்கு முக்கியமில்லை. உங்கள் வளமான மொழி, ஆழமான அறிவு, உங்கள் திறனை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வதே முக்கியம்” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x