Published : 01 Nov 2019 08:52 AM
Last Updated : 01 Nov 2019 08:52 AM

காற்று மாசு தடுக்க மின் வாகனத்தில் செல்ல மத்திய அமைச்சர் முடிவு

புதுடெல்லி

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் சுவாசக்கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தலைநகரில் காற்று மாசுப்பாட்டை குறைக்க மத்திய அரசும், டெல்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த, இன்று முதல் மின்சார சக்தியில் ஓடும் வாகனங்களைப் பயன்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முடிவெடுத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து உயரதிகாரிகளும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x