Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM

‘விடுதலைப் போரில் தமிழகம்’புகைப்பட கண்காட்சி நவ.14 வரை நீட்டிப்பு :

கோயம்பேட்டில் செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடத்தப்படும் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைப்படக் கண்காட்சியை நடிகர்சிவகுமார் நேற்று பார்வையிட்டார். உடன் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், பாடநூல் கழக துணை இயக்குநர் சங்கர சரவணன்.

சென்னை

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, தமிழக செய்தித் துறை சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் `விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் கடந்த நவ.1-ம் தேதி திறந்துவைத்தார். நவ.8 வரை நடக்க இருந்த இக்கண்காட்சி, மக்கள் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.

வரும் 14-ம் தேதி வரை காலை 8 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இலவசமாக கண்டுகளிக்கலாம். தமிழகத்துக்கு 20 முறைவருகை தந்த காந்தியடிகள் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்கூறும் அரிய புகைப்படங்களின் தொகுப்புகள், இதுவரை அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x