Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேல் 146-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சென்னை கிண்டிஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவுவாயிலில் அமைந்துள்ள படேலின் சிலை. படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஆளுநர் தலைமையில் ஆளுநர் மாளிகை அலுவலர்கள், ஊழியர்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், சர்தார் வல்லபபாய் படேல் நினைவு அறக்கட்டளைத் தலைவர் என்.ஆர்.தவே, பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திரா தலைவர் என்.ரவி, ஆளுநரின் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT