Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

தமிழகத்தில் புதிதாக 1,009 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள்586, பெண்கள் 423 என மொத்தம்1,009 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 119, சென்னையில் 114 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 2,623-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 55,015 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,183 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 11,492 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியோர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 4 பேர் இறந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x