Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

தமிழகத்தில் புதிதாக 1,245 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 740,பெண்கள் 505 என மொத்தம் 1,245 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். டெல்லி, கர்நாடகாவில் இருந்து வந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 167, கோவையில் 139, செங்கல்பட்டில் 92 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 84,641 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை26 லட்சத்து 33,534 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 1,442 பேர்குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 15,238பேர் சிகிச்சையில் உள்ளனர்.அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 6 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x