Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
பாஜக நிர்வாகி தீ.கார்த்திக் கூறும்போது,‘‘நான் கோவை வடக்கு மாவட்ட பாஜகஇளைஞரணி துணைத் தலைவராக உள்ளேன். தற்போது சமூக வலைதளத்தில் 9-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்குதான் வாங்கியுள்ளார் எனக்கூறி வருகின்றனர். நான் வசிப்பது4-வது வார்டு. என் குடும்பத்தினருக்கு 4-வது வார்டில்தான் வாக்குகள் உள்ளன.9-வது வார்டில் இடைத்தேர்தல் வந்ததால்,வேட்பு மனு அளித்து போட்டியிட்டு பார்க்கலாம் என முடிவு செய்துபோட்டியிட்டேன். என் குடும்ப சூழல் காரணமாக, நான் சரிவர பிரச்சாரத்துக்கு செல்ல முடியவில்லை. அதுபோக, யாரிடமும் நான் நிற்கிறேன் என்றுகூட அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் ஒரு வாக்கு கிடைத்தது. அதையே நான் வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன். அடுத்த முறை 4-வது வார்டில் நின்று நன்றாகவேலை செய்து, மிகப்பெரிய வெற்றியை அடைவேன். என் கட்சிக்கும்நான் பெருமை சேர்த்து தருவேன். இதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT