Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

தமிழகத்தில் புதிதாக1,653 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் புதிதாக 1,653 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 938, பெண்கள் 715 என மொத்தம் 1,653 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 204, கோவையில்201, ஈரோட்டில் 139, செங்கல்பட்டில் 101 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை26 லட்சத்து 43,683 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 25 லட்சத்து 91,480 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் 1,581 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகம் முழுவதும் 16,893பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 5 பேர் இறந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த வர்கள் எண்ணிக்கை 35,310 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x