Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

தமிழக மீனவர்களின் : வலையை பறித்த கடல் கொள்ளையர் :

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருட்செல்வன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில்அதே பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, 3 பெரிய ஃபைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் 10 பேர், மீனவர்களின் ஃபைபர் படகை வழிமறித்து கத்தியைகாட்டி மிரட்டி 10 கட்டு வலைகள், ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, செல்போன், டார்ச்லைட், சிக்னல் லைட் உட்பட ரூ.3 லட்சம் மதிப்புடைய பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.

நேற்று காலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்த 4 மீனவர்களும், இதுகுறித்து கிராம கடலோர காவல் குழும போலீஸில் புகார் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x