Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி சட்டப்பேரவையில் நேற்று மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சரஸ்வதி ஆகிய 4 பேரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியபோது, ‘‘நீட் தேர்வு, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2010-ல் கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே நீட் தேர்வு நடந்துவருகிறது. நீட் தேர்வு இருந்தால் ஏழை மாணவர்கள் கேபிடேஷன் கட்டணம் இல்லாமல் படிக்கலாம். நீட் தேர்வு இல்லாவிட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் லாபமாக இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT