Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய - தமிழக காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய அரசு விருது :

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின்விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 8 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய காவல் அதிகாரிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டுமுதல் சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குற்றவழக்குகள் சம்பந்தமான விசாரணைகளில் தொழில்முறை தன்மையை ஊக்குவிக்கவும், சிறப்பாக விசாரணை நடத்துபவர்களை ஊக்குவிக்கவும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

காவல் துறை மட்டுமின்றி, சிபிஐ, என்ஐஏ அதிகாரிகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2021-ம் ஆண்டுக்கான விருது, நாடு முழுவதும் 152 காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதில், தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் சிபிசிஐடி ஆய்வாளர் சரவணன், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பரசி, கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயவேல், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் கலைச்செல்வி, சென்னை பெருநகர காவல்துறை உளவுப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன், சென்னை குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பர முருகேசன், நாகர்கோவில் சிறப்பு பிரிவு ஆய்வாளர் கண்மணி ஆகியோர் மத்திய அரசின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x