Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
நீதிக்கட்சியில் இருந்து வரலாறு தொடங்குவதாக இருந்தால், அதில் அதிமுகவும் அடங்கும். 1952-ம் ஆண்டில் இருந்துதான் சட்டப்பேரவையை கணக்கிட வேண்டும். தற்போது 1921-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு நூற்றாண்டு என்று திமுக அரசு கூறுகிறது. ஆனால், 1937-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை கணக்கிட்டு தமிழக சட்டப்பேரவையின் பொன்விழாவை அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டாடினார். தங்களின் இஷ்டத்துக்கு வரலாற்றை திமுக மாற்றி எழுதுகிறது.
தமிழகத்தின் தற்போதைய நிதி நெருக்கடியில் இதுபோன்ற பெரிய விழா தேவையற்றது. ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்தபோது, காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகபங்கேற்கவில்லை. எனவே, தற்போது நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT